Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday 26 February 2011

நமக்குத் தொழில் கவிதை

நேற்று என்னைச் சந்தித்த தோழி கேட்டாள் .நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் அதனை நாம் பின்பற்ற வேண்டும் தெரியுமா ? என சொல்லியதோடு மிகவும் சொக்கிப்போய் என்ன வரிகள் ,என்ன வரிகள் என்ற பொழுது ,நான் இதை எழுதியவரை உமக்கு தெரியும் ,ஆனால் ,எதற்காக ,எப்பொழுது ,எதற்காக எழுதியது என்பதனை தெரிந்து கொள்ளவும் என விவரங்களை கூறியதை இங்கே உங்களின் பார்வைக்கும் ....

இது எடுக்கப்பட்ட இடம் பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை-யினின்று .

தமது நங்குடிகளின் தொழில் கவிதை எழுதுவது ,தனது குடிகளின் நாட்டிற்கு உழைப்பது ,இவ்விசயத்தில் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் மேற்கொள்ளவேண்டும் அப்பத்தான் உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது .சிந்தையே, சிந்தையே, இம்மூன்றும் யாருக்குனு பார்

பொதுவாதனது அல்ல


//நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய். //




முதலில் ஒரு ஆக்கத்தை எப்படி படிப்பது என தெரிந்து படிக்கவேண்டும்

Wednesday 16 February 2011

உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்

மழை பெய்கிறது,
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும்
ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே
உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல்,
ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்
ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி
யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள்.
ஆமடா, விதிவசந்தான்.
‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது
ஈசனுடைய விதி.
சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான
சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும்
மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்
கதைகளை மூடரிடங் காட்டி வயிறுபிழைத்து
வருகிறார்கள்கள்.
குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?
அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல
உடைகளுடன் குடியிருப்பாயானால்.
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.


.......பாரதி -வசன கவிதைகள் -3.காற்று-10லிருந்து ...

தமிழக பக்த கோடிகள் அனைவரும் மூடர்களாம் ,தமிழ் மகா கவி எப்படி தைரியமாக சொல்லியிருக்காரு ,பாத்தீங்களா .
யாருக்கு இந்த தைரியம் வரும் .

தெரிந்துகொள்ளுங்கள் தமிழக பக்த கோடிகளே,
ஆரியர்கள் உங்கள எந்த இடத்தில் வைத்துள்ளனர் தங்களின் வயிற்று பிழைப்புக்கு என்பதனை. இப்படிப்பட்ட வயிற்றுப் பிழைப்பு ஆன்மீகம் எப்படி உண்மையானதாக இருக்கமுடியும் .

சற்றே யோசியுங்கள்.

உண்மையை உணருங்கள் தமிழர்களே.




.

Monday 14 February 2011

கண்ணம்மா - என் காதலி

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ...

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ?

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;


வேதமடி நீ யெனக்கு,


....பாரதியார் கவிதைகளில் இருத்து