Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday 26 February 2011

நமக்குத் தொழில் கவிதை

நேற்று என்னைச் சந்தித்த தோழி கேட்டாள் .நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் அதனை நாம் பின்பற்ற வேண்டும் தெரியுமா ? என சொல்லியதோடு மிகவும் சொக்கிப்போய் என்ன வரிகள் ,என்ன வரிகள் என்ற பொழுது ,நான் இதை எழுதியவரை உமக்கு தெரியும் ,ஆனால் ,எதற்காக ,எப்பொழுது ,எதற்காக எழுதியது என்பதனை தெரிந்து கொள்ளவும் என விவரங்களை கூறியதை இங்கே உங்களின் பார்வைக்கும் ....

இது எடுக்கப்பட்ட இடம் பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை-யினின்று .

தமது நங்குடிகளின் தொழில் கவிதை எழுதுவது ,தனது குடிகளின் நாட்டிற்கு உழைப்பது ,இவ்விசயத்தில் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் மேற்கொள்ளவேண்டும் அப்பத்தான் உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது .சிந்தையே, சிந்தையே, இம்மூன்றும் யாருக்குனு பார்

பொதுவாதனது அல்ல


//நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய். //




முதலில் ஒரு ஆக்கத்தை எப்படி படிப்பது என தெரிந்து படிக்கவேண்டும்

Thursday 17 February 2011

இப்படி குறை கூறுவது தான் , எதிர்ப்பது தான் வேலையா என்று பொறுப்பில்லாமல் பேசும் பேர்வழிகளின் செவிப்பறையில் அறைந்து கண்களைத்திறக்கச் செய்யும் தகவல் இது

நடிகர் சிவகுமார் ஓவியக் கல்லூரியில் படித்துத் தேர்ந்த முழுமையான ஓவியர். அதனைத் தொழிலாகக் கொள்ளாமல் திரைப்படத் துறையிலே அடியெடுத்து ராணி இதழில் உங்களோடு பேசுகிறேன் என்ற தொடரை எழுதி வருகிறார். 24.1.2010 வார ராணியில் பக்கம் 22 ல் வந்தது ... மயிலாடன் எழுதியதிலிருந்து.

அவர் ஓவியர் ஆதலால் பல கோயில்களுக்கும் சென்று நேரிடையாக ஓவியம் தீட்டுவது அவரது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் பெருவுடையார்கோயில்,திருச்சி மலைக்கோட்டைக் கோயில்களுக்குச் சென்று கோபுரங்களின் ஓவியங்களைத் தீட்டினார். பலரும் அதற்கு உதவி செய்தனர்.

சிறீரங்கம் கோயில் கோபுரத்தையும் நேரில் சென்று ஓவியம் வரைந்திட விரும்பி அங்கு சென்ற போது ஓர் அவமதிப்பு அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் படுகிற கோணம் புஷ்பகரணி தெப்பக்குளம் பக்கம்தான் கிடைக்கிறது என்பதால் அந்தப் பக்கம் சென்றார்
இளைஞரான ஓவியர் சிவக்குமார்.

என்ன நடந்தது?

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். உடனே, நீ யார்? உன் குலகோத்திரம் என்ன? என்ற கேள்விக் கணைகளை அவர்முன் எறிந்தார்.
பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து வந்தவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்து கொண்டதும் அர்ச்சகர் முகம் போன போக்கே சரியில்லையாம். முறையா
அனுமதி வாங்காம கோயிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.

நான் ஓர் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். மசியவில்லை அர்ச்சகர்.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக சொன்னாராம். ஓ, நீ நியாய தர்மம் வேறு பேசுறீயா? என்று கூறி உள்ளே போய் வேறு சில அர்ச்சகப் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தாராம்.

அடிக்காத குறைதானாம் _ அவமதிப்புடன் திரும்பினேன் என்று கூறும் சிவகுமார் ஒன்றைக் கூறுகிறார்:

இந்த இடத்தைக் கொஞ்சமென்ன, அதிகமாகவே கவனிக்கவேண்டும்; நெஞ்சில் நிலை நிறுத்தியும் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் மீது எனக்கு அப்பொழுது தான் பெரிய மரியாதை வந்தது

இப்படி எழுதியுள்ளார் சிவகுமார்.

தலைவலியும், திருகுவலியும் அவரவர்களுக்கும் வந்தால்தானோ!


.

.