
ஒவ்வொரு தேர்தலும் ஒருவர் ஹீரோவாக வலம்வருவது வாடிக்கையான ஒன்று .இந்தத்தேர்தலின் ஹீரோ யார் என்று பார்த்தோமானால் முதலில் இந்த தேர்தலுக்கும் இதற்கு முன் இருந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசத்தைப்பார்த்தோமானால் .சென்ற தேர்தலின் ஹீரோ தேர்தல் அறிக்கை.ஆனால் ,இந்தத்தேர்தலில் ஹீரோ தமிழனின் இருப்பு .இருப்பு என்னும் பதம் அனைத்தையும் உள்ளடக்கியது .இந்தத்தேர்தல் தான் தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கப்போகிறது .அதனால் இந்தத்தேர்தலில் தான் தமிழர்கள் ஒவ்வொருவரும் தொலைநோக்கோடு சிந்தித்து வாக்களிக்கவேண்டும் .அதற்கு நாம் தற்பொழுதைய நிலையை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் .சென்ற தேர்தலில் போட்டியிட்ட ஹீரோவுடன் இந்தத்தேர்தலில் பணபலமும் சேர்ந்துகொள்ளும் .கிடைப்பது கட்டாயம் கிடைத்துவிடும் .அதனால் அதனை கண்டுகொள்ளவேண்டிய அவசியமில்லை தமிழக வாக்காளர்கள் .இங்கு கண்டுகொள்ளவேண்டியது ஒன்று உண்டென்றால் இது மாற்று அரசியலை வரவேற்றவேண்டியதன் அவசியத்தையும் ,அதனை வளர்ந்தெடுக்கவேண்டிய கடப்பாட்டையுமோ தவிர வேறு ஒன்றுமில்லை .அப்படியான கட்டத்தில் நாம் தமிழர்களாக இணைவதில் ,ஒன்றுசேர்வதில் ,வெற்றிகாண்பதில் உறுதியாக இருக்கவேண்டும் .
No comments:
Post a Comment