Friday 18 February 2011

பாரதி ஏன் கோட்டு போட்டுள்ளார் ?

நொம்ம நாளா என்னுள் ஓடிக்கிட்டிருந்த எங்கப்பா என்னிடம் கேட்ட கேள்வியிது .தமிழ் நாட்டுக்கு வந்து இங்குள்ள தமிழர்களின் வறுமை நிலையப்பாத்திட்டு மிகவும் மனமுடைஞ்சு வழக்கறிஞரான தான் தனது உடையினை அவர்கள் என்று நல்ல உடை உடுத்துகின்றார்களே அன்று தான் நானும் நல்ல உடை உடுப்பேனு சபதம் எடுக்கும் அளவிற்கு இங்கு வறுமை இருந்துள்ளதை காந்தியின் உடை மாற்றம் என்னும் நிகழ்ச்சி நமக்கு பாடம் .இது நடந்தது மதுரையில .அங்க தான் சேதுபது ஸ்கூலில் வேளை பாத்தார் மகா கவி .ஒரு தேசத்தொண்டருக்கு அதுவும் மகா கவிக்கு ஏன் இந்த மக்கள் கண்களுக்கு தெரியவில்லை .அது பற்றி அவரின் நெஞ்சு ஏன் பொறுக்கவில்லை ? .ஏழைய விடுங்க பாரதிக்கு அவங்கொல்லாம் முக்கியமில்லாதவங்க .சரி, பாரதி ஏன் கோட்டு போட்டுள்ளார் ? என்பதற்கு எங்கும் பதிலே இல்லை .

ஆனால்

பாரதி தான் மட்டும் கோட்டு போட்டுக்குவாராம் .மந்தவங்க போட்டுக்கிட்டா என்னாவா பதரி(றி) பாடுராறு பாருங்க ...

//ஒரு சார்
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது //

என்னையா நாயம் ? .

அடுத்தவனுக்கும் மட்டும் தான் எல்லாம் .


.

No comments: